ரூ.26 லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டிடம்


ரூ.26 லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டிடம்
x
தினத்தந்தி 27 Sep 2023 6:45 PM GMT (Updated: 27 Sep 2023 6:46 PM GMT)

தலைஞாயிறு அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளியில் ரூ.26 லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டிடம்

நாகப்பட்டினம்

வாய்மேடு:

தலைஞாயிறு ஒன்றியம் பண்ணத்தெரு ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ரூ.26 லட்சத்தில் புதிதாக வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினகுமார் தலைமை தாங்கினார். இதில் மாநில விவசாயிகள் ஆலோசனை குழு உறுப்பினர் மகாகுமார் கலந்து கொண்டு புதிதாக கட்டப்பட்ட வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஒன்றியக்குழு உறுப்பினர் ரம்யா மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story