புதுமை பரலோக அன்னை ஆலய தேர் பவனி


புதுமை பரலோக அன்னை ஆலய தேர் பவனி
x

வடக்கன்குளம் புதுமை பரலோக அன்னை ஆலய தேர் பவனி நடந்தது.

திருநெல்வேலி

வடக்கன்குளம்:

வடக்கன்குளம் பரிசுத்த புதுமை பரலோக அன்னை ஆலய 326-ம் ஆண்டு திருவிழா கடந்த 6-ந் தேதி தொடங்கியது. தூத்துக்குடி மறை வட்ட முதன்மை குரு ஜோசப் ரவி பாலன் தலைமையில் பங்கு தந்தை மார்டின் கொடியை அர்ச்சித்து ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து மறையுறை நற்கருணை ஆசீர் நடைபெற்றது.

விழா நாட்களில் தினமும் மறையுரை, ஜெபமாலை, நற்கருணை ஆசீர், திருப்பலி போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது.

9-ம் நாள் விழாவான நேற்று முன்தினம் திருமண வார்த்தைப்பாடு புதுப்பித்தல் நிகழ்ச்சியும், கோட்டாறு மறை மாவட்ட ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் பெருவிழா மாலை ஆராதனையும் நடந்தது.

10-ம் நாள் விழாவான நேற்று காலையில் தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா சிறப்பு திருப்பலியும், அதைத் தொடர்ந்து மலையாளம், ஆங்கிலம், தமிழ் வழியாக திருப்பலிகள் நடத்தப்பட்டது. இந்த வழிபாட்டில் அருட்தந்தையர்கள் தாமஸ், ஜெபநாதன், சிபி, அனுஸ்தாசிஸ் ஜோ, நிலவன், ராஜேஷ், சூசை மாணிக்கம், பீட்டர் பாஸ்டியான், ஜெரால்டு ரவி, ரினோ, ஜான் ரோஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். மாலையில் அன்னையின் தேர்பவனி, மரியே வாழ்க மரியே வாழ்க என்ற கோஷத்துடன் நடைபெற்றது. தொடர்ந்து நன்றி வழிபாடு, நற்கருணை ஆசீர் போன்ற நிகழ்ச்சிகளுடன் விழா நிறைவு பெற்றது. ஏற்பாடுகளை பங்குத்தந்தை மார்ட்டின், உதவி பங்குத்தந்தை சவரிராஜ் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.

1 More update

Next Story