ரூ.13½ லட்சத்தில் புதிய ரேஷன் கடை


ரூ.13½ லட்சத்தில் புதிய ரேஷன் கடை
x
தினத்தந்தி 31 July 2023 6:45 PM GMT (Updated: 31 July 2023 6:46 PM GMT)

ஆயக்காரன்புலம் மூன்றாம் சேத்தி ஊராட்சியில் ரூ.13½ லட்சத்தில் புதிய ரேஷன் கடையை ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

நாகப்பட்டினம்

வாய்மேடு:

ஆயக்காரன்புலம் மூன்றாம் சேத்தி ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.13.50 லட்சத்தில் ரேஷன் கடை கட்டப்பட்டது. இதன் திறப்பு விழாவில் ஓ. எஸ்.மணியன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு புதிய ரேஷன் கடையை திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். விழாவுக்கு ஊராட்சி மன்ற தலைவர் பானுமதி சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்க செயலாளர் வாஞ்சிநாதன் வரவேற்றார். கூட்டுறவு சங்க தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர் சுப்பையன், ஊராட்சி மன்ற தலைவர் ராமையன், துணைத்தலைவர் பார்த்தசாரதி, ஒன்றியக்குழு உறுப்பினர் கண்ணகி முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜூ மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பாண்டியன் நன்றி கூறினார்.


Next Story