திருப்பத்தூர் குள்ளாச்சாரி வட்டம் பகுதியில்புதிய ரேஷன் கடை கட்டிடம்


திருப்பத்தூர் குள்ளாச்சாரி வட்டம் பகுதியில்புதிய ரேஷன் கடை கட்டிடம்
x

திருப்பத்தூர் குள்ளாச்சாரிவட்டம் பகுதியில் புதிய ரேஷன்கடை திறக்கப்பட்டது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர்

திருப்பத்தூர் குள்ளாச்சாரிவட்டம் பகுதியில் புதிய ரேஷன்கடை திறக்கப்பட்டது.

திருப்பத்தூர் நகராட்சி 36- வது வார்டுக்கு உட்பட்ட குள்ளாச்சாரி வட்டம் பகுதியில் உள்ள 1000 குடும்ப அட்டைகளை கோனேரி குப்பம் ரேஷன் கடை பகுதியில் இருந்து பிரித்து புதிய ரேஷன்கடை ஏற்படுத்த வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நல்லதம்பி எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்து இருந்தனர். அதனை ஏற்று குள்ளாச்சாரி வட்டம் பகுதியில் புதிய ரேஷன் கடை அமைக்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு மாடப்பள்ளி கூட்டுறவு சங்கத் தலைவர் ஏ.ஏ. தேவராஜன் தலைமை வகித்தார், சங்க சார்பதிவாளர் தர்மேந்திரன் முன்னிலை வகித்தார். செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார். புதிய ரேஷன் கடையை ரிப்பன் வெட்டியும் குத்துவிளக்கு ஏற்றியும் ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ., நகராட்சித் தலைவர் சங்கீதா வெங்கடேஷ், நகராட்சி கவுன்சிலர் மு.வெற்றிகொண்டான் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை வழங்கினர்.

நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க துணைத் தலைவர் சாமிகண்ணு, ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன், ஒன்றிய கவுன்சிலர் ரகு, இயக்குனர் குணசேகரன் சிவலிங்கம், ராமச்சந்திரன் உட்பட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story