புதிய ரேஷன் கடை திறப்பு


புதிய ரேஷன் கடை திறப்பு
x

நெல்லை சேந்திமங்கலத்தில் புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது.

திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சி 3-வது வார்டு சேந்திமங்கலம் கிராமம் பெருமாள் கோவில் தெருவில், மாநகராட்சி சார்பில் ரூ.10 லட்சம் செலவில் புதிதாக ரேஷன் கடை கட்டப்பட்டு உள்ளது. அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. தச்சநல்லூர் பகுதி தி.மு.க. செயலாளரும், 3-வது வார்டு கவுன்சிலருமான தச்சை சுப்பிரமணியன் தலைமை தாங்கி, புதிய ரேஷன் கடையை திறந்து வைத்து, விற்பனையையும் தொடங்கி வைத்தார். மேலும் மாணவ-மாணவிகளுக்கு இலவச நோட்டுகளையும் வழங்கினார்.

நிகழ்ச்சியில் தி.மு.க. மாநகர பிரதிநிதி சிவா, விவசாய அணி செயலாளர் தமிழரசன், வட்ட செயலாளர் சிந்து முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story