முன்னீர்பள்ளத்தில் புதிய தார் சாலை பணி தொடக்கம்


முன்னீர்பள்ளத்தில் புதிய தார் சாலை பணி தொடக்கம்
x

முன்னீர்பள்ளத்தில் புதிய தார் சாலை அமைக்கும் பணி தொடங்கியது.

திருநெல்வேலி

இட்டமொழி:

பாளையங்கோட்டை யூனியன் முன்னீர்பள்ளம் பஞ்சாயத்து ஜோதிபுரம் அரோமா நகரில் இருந்து ஆரைகுளம் வரையிலும் ரூ.2.54 கோடி மதிப்பில் புதிய தார் சாலை அமைக்கும் பணி தொடக்க விழா நடைபெற்றது. பாளையங்கோட்டை 9-வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் செல்வசங்கர் முன்னிலை வகித்தார்.

பாளையங்கோட்டை யூனியன் தலைவர் கே.எஸ்.தங்கபாண்டியன் தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார். ஒன்றிய செயலாளர் போர்வெல் கணேசன், முன்னீர்பள்ளம் பஞ்சாயத்து தலைவர் உமா வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story