புதிய மின்மாற்றி அமைப்பு


புதிய மின்மாற்றி அமைப்பு
x

பரமசிவபுரத்தில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது

மயிலாடுதுறை

குத்தாலம்

குத்தாலம் அருகே பாலையூர் ஊராட்சி பரமசிவபுரத்தில் ரூ.7.5 லட்சத்தில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டது. இதன் தொடக்க விழா நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் விஜயா ராஜேந்திரன் தலைமை தாங்கினார். குத்தாலம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மங்கைசங்கர் முன்னிலை வகித்தார். இதில், நிவேதா முருகன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு புதிய மின்மாற்றியை இயக்கி வைத்தார். அப்போது தி.மு.க. மாவட்ட பொருளாளர் ரவி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஸ்ரீதர், ஊராட்சி மன்ற தலைவர் கவிதாராஜா மற்றும் மின்வாரிய அலுவலர்கள், கிராமமக்கள் பலர் கலந்து கொண்டனர்.




1 More update

Next Story