புதிய வாக்காளர்களை விடுபடாமல் சேர்க்க வேண்டும்


புதிய வாக்காளர்களை விடுபடாமல் சேர்க்க வேண்டும்
x

புதிய வாக்காளர்களை விடுபடாமல் சேர்க்க வேண்டும்

திருவாரூர்

திருவாரூரில் பா.ஜனதா கட்சி நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களின் மண்டல அளவிலான வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பயிற்சி முகாம் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு திருவாரூர் மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். முன்னதாக மாவட்ட பொதுச்செயலாளர் செந்தில் அரசன் வரவேற்றார். இதில் மாநில பொதுசெயலாளர் கருப்பு முருகானந்தம் கலந்து கொண்டு பேசியதாவது:-

பா.ஜ.க. சார்பில் இல்லம் தோறும் சென்று வாக்காளர் பட்டியலில் புதிய வாக்காளர்களை விடுபடாமல் சேர்க்க வேண்டும். இறந்தவர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்திட வேண்டும். இடம் மாறி சென்றவர்கள் உரிய வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் வேறு இடங்களுக்கு புலம் பெயர்ந்தவர்களை நீக்க வேண்டும். இதற்கான பயிற்சியை முழுமையாக புரிந்து பெற்று களத்தில் பணியாற்றிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.இதில் மாநில விவசாய அணி செயலாளர் கோவி சந்துரு, மாநில செயற்குழு உறுப்பினர் கோட்டூர் ராகவன், மாவட்ட துணை தலைவர்கள் மணிமேகலை, சதாசதிஷ், மாவட்ட மகளிர் அணி தலைவி ரமாமணி மற்றும் பலர் கலந்துகொண்டனர். முடிவில் திருவாரூர் நகர தலைவர் கணேசன் நன்றி கூறினார்.


Next Story