பசுமை கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை - அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு


பசுமை கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை - அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 20 May 2022 5:34 AM GMT (Updated: 20 May 2022 7:02 AM GMT)

தமிழகத்தில் தக்காளி விலையை கட்டுப்படுத்த பண்ணை பசுமை கடைகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.

சென்னை,

கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாவது

தமிழகத்தில் தக்காளி விலையை கட்டுப்படுத்த பண்ணை பசுமை கடைகள் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். வெளிச்சந்தையில் தக்காளி விலை கட்டுக்குள் வரும் வரை குறைந்த விலையில் விற்கப்படும்.

பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் இன்று முதல் குறை விலையில் தக்காளி விற்பனை செய்யப்படும். முதற்கட்டமாக நேற்று ஒருகிலோ தக்காளி ரூ70 முதல் ரூ.85 வரை விற்கப்பட்டது. அனைத்து மாவட்டங்களிலும் கூட்டறவுத்துறையின் 65 பண்ணை பசுமை கடைகளில் தக்காளி விற்கப்படும்.

சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள கூட்டுறவுத்துறை மூலம் பண்ணை பசுமை கடைகள் மூலம் தக்காளி விற்பனை செய்யப்படும். சென்னை, கோவை, மதுரை, திருச்சியில் 4 மெ.டன் அளவிற்கு தக்காளி குறைந்த விலையில் விற்கப்பட்டது என்றார்.


Next Story