நெய்வேலி என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிப்பு


நெய்வேலி என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிப்பு
x

6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி. நிர்வாகத்திடம் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

கடலூர்,

நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் வரும் 25-ந்தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். மாதம் 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி. நிர்வாகத்திடம் வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது.

பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் வரும் 22, 23-ந்தேதிகளில் உண்ணாவிரதம் மற்றும் தர்ணா போராட்டங்கள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஒப்பந்த தொழிலாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Next Story