நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம்


நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம்
x

நெல்லை சித்த மருத்துவ கல்லூரியில் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம் நடந்தது.

திருநெல்வேலி

பேட்டை:

பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவ கல்லூரி திருமூலர் மாளிகையில் நேற்று முதல் காய்ச்சல் தடுப்பு மருந்துகளாக கபசுர குடிநீர் மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த முகாமை கல்லூரி முதல்வர் (பொறுப்பு) டாக்டர் சாந்தாமரியா தொடங்கி வைத்தார்.

பொது மருத்துவத்துறை தலைவர் டாக்டர் மனோகரன், டாக்டர் கோமளவல்லி மற்றும் பல மருத்துவர்கள் கலந்து கொண்டனர். இங்கு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தினமும் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை கசாயம் வழங்கப்படுகிறது.

1 More update

Next Story