பழைய சைக்கிள்களை கொண்டு என்.ஐ.டி. மாணவர்கள் உருவாக்கிய ஓய்வறை


பழைய சைக்கிள்களை கொண்டு என்.ஐ.டி. மாணவர்கள்  உருவாக்கிய ஓய்வறை
x

பழைய சைக்கிள்களை கொண்டு என்.ஐ.டி. மாணவர்கள் ஓய்வறையை உருவாக்கினர்.

திருச்சி

துவாக்குடி:

துவாக்குடி அருகே உள்ள என்.ஐ.டி. கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், சைக்கிளில் முதன்மை வாயிலில் இருந்து வகுப்புகளுக்கு செல்வார்கள். அவர்கள் படிப்பு முடிந்ததும் சைக்கிள்களை விற்பனை செய்வார்கள். சிலர் கல்லூரியிலேயே விட்டுவிட்டு செல்வார்கள். இந்நிலையில் கல்லூரி கட்டிடக்கலைத்துறை மாணவர் சுஜன் லாசி தலைமையில் 70 மாணவர்கள் ஒன்று சேர்ந்து ஏ.என்.டி.சி. இண்டர்நேஷனல் என்ற நாசா நடத்தும் 66-வது ஆண்டு போட்டியில் சுழற்சி என்ற தலைப்பில் கலந்து கொண்டனர். அந்த மாணவர்கள் 45 நாட்கள் முயன்று என்.ஐ.டி. மாணவர்கள் கைவிட்ட 100 சைக்கிள்களின் பிரேம்கள், டியூப்கள் உள்ளிட்ட உதிரிபாகங்களை கொண்டு ஓய்வறை உருவாக்கினர்.

இந்த ஓய்வறையானது துவாக்குடி அருகே பிலக் தியேட்டர் பகுதியில் இயங்கி வரும் உழவர் சந்தை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. வியாபாரிகள் இளைப்பாறுவதற்காக அமைக்கப்பட்டுள்ள இந்த ஓய்வறையின் திறப்பு விழா நடைபெற்றது. இதில் கல்லூரி இயக்குனர் அகிலா கலந்து கொண்டு ஓய்வறையை திறந்து வைத்தார். இதில் வேளாண்துறை துணை இயக்குனர் சரவணன் உள்ளிட்ட வேளாண் அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஓய்வறையின் முகப்பில், 'சுழன்றும் ஏர் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை' என்ற திருக்குறளுடன் வரவேற்பு ஓவியத்தை மாணவர்கள் வரைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story