நாடாளுமன்றத் தேர்தலில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை யாராலும் அசைக்க முடியாது - அமைச்சர் ஏ.வ.வேலு


நாடாளுமன்றத் தேர்தலில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை யாராலும் அசைக்க முடியாது - அமைச்சர் ஏ.வ.வேலு
x

நாடாளுமன்றத் தேர்தலில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை யாராலும் அசைக்க முடியாது என அமைச்சர் ஏ.வ.வேலு கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க செயல் வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர் ஏ.வ.வேலு கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது,

நாடாளுமன்றத் தேர்தல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை யாராலும் அசைக்க முடியாது. இந்த மாவட்டம் மாநிலத்தில் முதல் மாவட்டமாக வரும். ஒவ்வொரு வாக்கு சாவடிகளுக்கும் பூத் கமிட்டி அமைத்து 100 பேருக்கு ஒருவர் என ஆயிரம் பேருக்கு 10 பேர் அமைத்து கட்சிப் பணிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தயாராக வேண்டும்

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story