தமிழ்நாட்டில் இன்று யாருக்கும் கொரோனா இல்லை


தமிழ்நாட்டில் இன்று யாருக்கும் கொரோனா இல்லை
x

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பை கட்டுபடுத்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.

சென்னை,

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பை கட்டுபடுத்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. அந்தவகையில், அரசு மருத்துவமனைகளில் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என அறிவுறுத்தி வந்தது. இந்தநிலையில், கடந்த மூன்று மாதங்களாக கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் பதிவாகி வந்தது. மேலும், கடந்த இரண்டு வாரமாக சில நேரம் ஒற்றை இலக்கத்திலும், சில நேரம் தொற்று பாதிப்பு யாருக்கும் கண்டறியப்படாமலும் இருந்தது.

அந்த வகையில், தமிழ்நாட்டில் இன்று யாருக்கும் கோரானா பாதிப்பு ஏற்படவில்லை. இன்று கொரோனா பாதிப்பில் இருந்து ஒருவரும் குணம் அடைந்து வீடு திரும்பவில்லை. மேலும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 7ஆக உள்ளது. இதைபோல, நேற்று தமிழ்நாட்டில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.


Next Story