கெட்டுப்போன 32 கிலோ கோழி இறைச்சி பறிமுதல்


கெட்டுப்போன 32 கிலோ கோழி இறைச்சி பறிமுதல்
x

திருப்பூர் மாவட்டத்தில் உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கெட்டுப்போன 32 கிலோ கோழி இறைச்சியை பறிமுதல் செய்து அழித்தனர். 13 பேருக்கு அபராதம் விதித்தனர்.

திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்தில் உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கெட்டுப்போன 32 கிலோ கோழி இறைச்சியை பறிமுதல் செய்து அழித்தனர். 13 பேருக்கு அபராதம் விதித்தனர்.

32 கிலோ கோழி இறைச்சி அழிப்பு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உணவகங்களில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிவுறுத்தலின்படி, திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில் மாவட்டத்தில் உள்ள சவர்மா தயாரித்து விற்பனை செய்யும் கடைகள், அசைவ உணவகங்களில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

நேற்று நடந்த ஆய்வில் கெட்டுப்போன கோழி இறைச்சி 32 கிலோ, கெட்டுப்போன சமைத்த சிக்கன் 5 கிலோ, கெட்டுப்போன கிரில் சிக்கன் 5 கிலோ, கெட்டுப்போன மசாலாக்கள் 3 கிலோ, பழைய புரோட்டா 3 கிலோ, பழைய புரோட்டா மாவு 11 கிலோ, சமைத்து சேமித்து வைத்த சாப்பாடு 8 கிலோ, கெட்டுப்போன மயோனிஸ் 2 கிலோ ஆகியவை பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன.

13 பேருக்கு அபராதம்

சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்து விற்பனை செய்த 8 உணவகங்களுக்கு ரூ.1,000 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய 5 பேருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. 62 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 14 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதுபோன்ற ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உணவு சம்பந்தப்பட்ட புகார்களுக்கு உணவு பாதுகாப்புத்துறையின் செயலி மற்றும் 94440 42322 என்ற வாட்ஸ்அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என்று அறிவித்துள்ளனர். இந்த ஆய்வின்போது மாநகர நல அதிகாரி கவுரிசரவணன் உடனிருந்தார்.


Related Tags :
Next Story