வடசென்னை அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு


வடசென்னை அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு
x
தினத்தந்தி 11 July 2023 12:07 PM GMT (Updated: 15 July 2023 9:50 AM GMT)

வடசென்னை அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர்

மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு ஊராட்சியில் வடசென்னை அனல் மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு முதல் யூனிட்டில் மூன்று அலகுகளின் தலா 210 வீதம் 630 மெகாவாட்டும், 2-வது யூனிட்டில் இரண்டு அலகுகளில் தலா 600 வீதம் 1200 மெகாவாட் மின் உற்பத்தியும் செய்யப்படுகிறது. இந்நிலையில் 2-வது யூனிட் முதல் அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவால் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனை சரி செய்யும் பணியில் தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக அனல் மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story