வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை கூட்டம்


ராணிப்பேட்டையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட நிலை அலுவலர்கள் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். கூட்டத்தில், சட்டம் ஒழுங்கு, சாலை பாதுகாப்பு, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டு, அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி, மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முரளி மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story