எழும்பூரில் தங்கும் விடுதியில் நர்ஸ் தற்கொலை


எழும்பூரில் தங்கும் விடுதியில் நர்ஸ் தற்கொலை
x

எழும்பூரில் தங்கும் விடுதியில் நர்ஸ் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சென்னை

சென்னை,

திருவள்ளூர் மாவட்டம் ஆதிகாட்டூர் கருணாநிதி தெருவை சேர்ந்த செங்குட்டுவன் மகள் இளமதி (வயது 23). இவர், சென்னையில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வந்தார். இவர் ஆஸ்பத்திரிக்கு சொந்தமான எழும்பூர் கென்னட் லேன் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் தங்கி வேலை பார்த்து வந்தார். நேற்று அவருக்கு இரவு நேர வேலை என்பதால் காலையில் இளமதி விடுதி அறையில் தனியாக இருந்தார். பின்னர் அவருடைய குடும்பத்தாரிடம் செல்போனில் பேசியதாக கூறப்படுகிறது. அதன்பின், காலையில் தினமும் சாப்பிட செல்லும் இளமதி வெகுநேரம் ஆகியும் அறையிலிருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த விடுதியின் பெண் பாதுகாவலர் அவரது அறை கதவை தட்டினார். ஆனால் கதவை அவர் திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த விடுதியின் பாதுகாவலர் மற்றும் உடன் இருந்தவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு மின்விசிறியில் இளமதி தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.இதுகுறித்து தகவல் அறிந்துவந்த எழும்பூர் போலீசார் இளமதியின் உடலை மீட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் இளமதியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.


Next Story