விஷம் தின்ற நர்சிங் மாணவி சாவு

கீரனூர் அருகே விஷம் தின்ற நர்சிங் மாணவி பரிதாபமாக இறந்தார்.
கீரனூர்:
கீரனூர் அருகே உடையாளிப்பட்டியை சேர்ந்தவர் முத்துப்பாண்டியன். இவரது மகள் அஜந்தா (வயது 17). இவர், புதுக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு நர்சிங் படித்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டில் இருந்த எலி மருந்தை தின்று (விஷம்) மயங்கி கிடந்தார். இதையடுத்து அவரை வீட்டில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அஜந்தா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து உடையாளிப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





