திருநங்கைகளுக்கு நிலம் வழங்க எதிர்ப்பு: ஊராட்சி தலைவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் -ஐகோர்ட்டு


திருநங்கைகளுக்கு நிலம் வழங்க எதிர்ப்பு: ஊராட்சி தலைவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் -ஐகோர்ட்டு
x

திருநங்கைகளுக்கு நிலம் வழங்க எதிர்ப்பு: ஊராட்சி தலைவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு.

சென்னை,

கடலூர் மாவட்டம் வடலூர் அருகே நைனார்குப்பம் கிராமத்தில் திருநங்கைகளுக்கு நிலம் ஒதுக்கி அதற்கான பட்டா வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இந்த பட்டாவை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில், நயினார்குப்பம் ஊராட்சி தலைவர் மோகன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், மனுதாரர் திருநங்கைகளுக்கு எதிரான மனநிலையுடன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது. அரசு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றிய செயல், அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது மட்டுமின்றி, அடிப்படை உரிமைகளை மீறிய செயலாகும்.

எனவே, மனுதாரர் இதுதொடர்பாக இந்த ஐகோர்ட்டில் நேரில் ஆஜராகி எந்த சட்டத்தின் அடிப்படையில் இதுபோல தீர்மானம் நிறைவேற்றப்பட்டது? எந்த நோக்கத்துடன் இதுதொடர்பாக மாவட்ட கலெக்டருக்கு மனு அளிக்கப்பட்டது? என்பது குறித்தும் விளக்கம் அளிக்க வேண்டும். வழக்கு விசாரணையை வருகிற 21-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன் என்று உத்தரவிட்டு உள்ளார்.


Next Story