காவலர் வீர வணக்க நாள் அனுசரிப்பு


காவலர் வீர வணக்க நாள் அனுசரிப்பு
x

காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.

அரியலூர்

அரியலூரில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவலர் வீர வணக்கம் நாள் போலீசார் சார்பில் அனுசரிக்கப்பட்டது. அப்போது மைதானத்தில் உள்ள காவலர் நினைவு தூணில் அரியலூர் மாவட்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா உள்ளிட்ேடார் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், துணை சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் அஞ்சலி செலுத்தினர். பின்னர் பணியின் போது வீர மரணம் அடைந்த போலீசாருக்கு 63 துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.

1 More update

Next Story