கார் மோதி ஒடிசா தொழிலாளி பலி


கார் மோதி ஒடிசா தொழிலாளி பலி
x

கார் மோதி ஒடிசா தொழிலாளி பலியானார்.

புதுக்கோட்டை

ஒடிசா மாநிலம் தாய்வாடாவை சேர்ந்தவர் புஜேந்திரா பாமுடி (வயது 29). இவர் விராலிமலை அருகே உள்ள தனியார் கம்பெனியில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு விராலிமலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மாதிரிப்பட்டி பிரிவு சாலையை அவர் கடக்க முயன்றார். அப்போது மதுரையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக புஜேந்திரா பாமுடி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த விராலிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து புஜேந்திரா பாமுடியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் கார் டிரைவரான பெரம்பலூர் மாவட்டம் இளம்பளூரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் சரவணேஷ் (32) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story