புதுச்சத்திரம் பகுதியில்தடுப்பணை தூர்வாரும் பணிகளை அதிகாரி ஆய்வு


புதுச்சத்திரம் பகுதியில்தடுப்பணை தூர்வாரும் பணிகளை அதிகாரி ஆய்வு
x

புதுச்சத்திரம் பகுதியில் நடைபெற்று வரும் தடுப்பணை தூர்வாரும் பணிகளை கண்காணிப்பு அலுவலர் விஜயராஜ்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல்

அதிகாரி ஆய்வு

நாமக்கல் தாலுகா புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காவிரி டெல்டா மாவட்டங்களுக்கான சிறப்பு தூர்வாரும் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை கண்காணிக்க தமிழ்நாடு அரசால் நியமனம் செய்யப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர் விஜயராஜ் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இவர் வள்ளி அணைக்கட்டிற்கு மேல்புறம் மற்றும் கீழ்புறம் மற்றும் வரட்டாறு அணைக்கட்டிற்கு மேல்புறம் ஆகிய பகுதிகளில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணியினையும், வரட்டாறு அணைக்கட்டிற்கு கீழ்புறம் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணியினையும், பொடங்கம் கிராமத்தில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணியினையும், தடுப்பணைக்கு கீழ்புறம் மற்றும் மேல்புறம் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணியினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கூடுதல் எந்திரங்கள்

இதேபோல் கட்டியண்ணன் கோவில் அணைக்கட்டிற்கு மேல்புறம் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணி, அணைக்கட்டிற்கு கீழ்புறம் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணி ஆகியவற்றையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது தூர்வரும் பணிகளை விரைந்து முடிக்க கூடுதல் எந்திரங்களை பயன்படுத்த வேண்டுமென அவர் நீர்வளத்துறை செயற்பொறியாளருக்கு அறிவுரை வழங்கினார்.


Next Story