அலங்காநல்லூர் பேரூராட்சியில் அதிகாரி ஆய்வு


அலங்காநல்லூர் பேரூராட்சியில் அதிகாரி ஆய்வு
x

அலங்காநல்லூர் பேரூராட்சியில் அதிகாரி ஆய்வு நடத்தினார்.

மதுரை

அலங்காநல்லூர்

அலங்காநல்லூர் தேர்வு நிலை பேரூராட்சி பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாடு திட்டத்தில் ரூ.1 கோடியே 82 லட்சம் மதிப்பில் அறிவுசார் மையங்களில் வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது. இதை சென்னை பேரூராட்சிகளின் இயக்குனர் கிரண்குராலா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உதவி இயக்குனர் சேதுராமன், பேரூராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், செயல் அலுவலர் ஜூலான் பானு, உதவி செயற்பொறியாளர் சுரேஷ் மற்றும் பணியாளர்கள், அலுவலர்கள் உடன் இருந்தனர். முன்னதாக இயக்குனர், அங்குள்ள அலுவலக கோப்புகளை பார்வையிட்டு, அடிப்படை வசதிகள் பற்றியும் ஆய்வு செய்தார்.


Next Story