மாணவர் விடுதியில் அதிகாரி ஆய்வு


மாணவர் விடுதியில் அதிகாரி ஆய்வு
x

மாணவர் விடுதியில் அதிகாரி ஆய்வு செய்தார்.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

வத்திராயிருப்பு அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை என்ற புகார்கள் எழுந்தன. இதையடுத்து மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டியின் உத்தரவின் பேரில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் (பொறுப்பு) சிவக்குமார், தனி வட்டாட்சியர் முத்துமாரி, இளநிலை பொறியாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் மாணவர் விடுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் (பொறுப்பு) சிவக்குமார் கூறினார்.


1 More update

Next Story