அரசு அலுவலர்களுக்கு ஆட்சி மொழி பயிலரங்கம்


அரசு அலுவலர்களுக்கு ஆட்சி மொழி பயிலரங்கம்
x

விருதுநகரில் அரசு அலுவலர்களுக்கு ஆட்சி மொழி குறித்த பயிலரங்கம் 24-ந் தேதி தொடங்குகிறது.

விருதுநகர்


விருதுநகரில் அரசு அலுவலர்களுக்கு ஆட்சி மொழி குறித்த பயிலரங்கம் 24-ந் தேதி தொடங்குகிறது.

பயிலரங்கம்

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது:- விருதுநகர் மாவட்டத்தில் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஆட்சி மொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம் வருகிற 24 மற்றும் 25-ந் தேதிகளில் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. கருத்தரங்கினை கலெக்டர் மேகநாத ரெட்டி தொடங்கி வைக்கிறார்.

தமிழ் வளர்ச்சி துறை இயக்குனர் திட்ட செயலாக்கம் குறித்து சிறப்புரையாற்றுகிறார்.

கருத்துரை

கருத்தரங்கில் தமிழறிஞர்கள், உயர் அரசு அலுவலர்கள், தமிழ் அறிஞர்கள், மொழி வல்லுனர்கள் கலந்து கொண்டு தமிழ் மொழியின் தொன்மை, ஆட்சி மொழிக்கான தகுதி, மொழி வரலாறு, ஆட்சி மொழிச் சட்டம், செயல்பாடு பிழையின்றி தமிழில் எழுதுதல் குறிப்புகள், செயல்முறை ஆணைகள் தயாரித்தல், மொழி பயிற்சி, கலைச் சொற்கள் ஆகியவை குறித்து கருத்துரை வழங்க உள்ளனர்.

இதற்கான ஏற்பாடுகளை தமிழ் வளர்ச்சி துறை செய்து வருகிறது.

இவ்வாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story