காளியம்மன் கோவிலுக்கு அதிகாரிகள் `சீல்' வைப்பு


காளியம்மன் கோவிலுக்கு அதிகாரிகள் `சீல் வைப்பு
x

மண்டகப்படி வழங்க மறுப்பு தெரிவித்ததன் எதிரொலியாக காளியம்மன் கோவிலுக்கு அதிகாரிகள் `சீல்' வைத்தனர்.

புதுக்கோட்டை

மண்டகப்படி வழங்க மறுப்பு

புதுக்ேகாட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே வீரடிப்பட்டி கிராமத்தில் காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடத்துவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு திருவிழா நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் செய்து வந்தனர்.

இந்த நிலையில் கிராமத்தில் ஒரு தரப்பினர் தங்களுக்கு கோவிலில் மண்டகப்படி வழங்க வேண்டும் என்று மற்றொரு தரப்பினரிடம் கேட்டனர். அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவிக்கவே இரு தரப்பினரிடையே கோவில் திருவிழா நடத்துவது குறித்து கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

கோவிலுக்கு `சீல்'

இதனையடுத்து ஒரு தரப்பினர் தங்களுக்கு கோவிலில் மண்டகப்படி வழங்க வேண்டும் என்று கந்தர்வகோட்டை தாசில்தாரிடம் மனு அளித்தனர். இதையடுத்து தாசில்தார் மற்றொரு தரப்பினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்படாத நிலையில் தாசில்தார் காமராஜ் கோவிலை மூடி சீல் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின் பேரில் கந்தர்வகோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கேசவ மூர்த்தி, வருவாய் அலுவலர் கண்ணன், கிராம நிர்வாக அலுவலர் குமார விஜயன் ஆகியோர் முன்னிலையில் கோவிலுக்கு `சீல்' வைக்கப்பட்டது.


Next Story