மோகனூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி


மோகனூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி
x
தினத்தந்தி 5 Oct 2023 7:00 PM GMT (Updated: 5 Oct 2023 7:00 PM GMT)
நாமக்கல்

மோகனூர்:

மோகனூர் அடுத்த ஒருவந்தூர் முதலியார் தெருவை சேர்ந்தவர் ருக்மணி (வயது 82). இவர் நேற்று முன்தினம் ஒருவந்தூர் செல்லாண்டியம்மன் கோவில் திண்ணையில் அமர்ந்து கொண்டு வெற்றிலை போட்டு எச்சிலை துப்புவதற்காக சாலையோரம் சென்றார். அப்போது மோகனூரில் இருந்து ஒருவந்தூர் சென்ற மோட்டார் சைக்கிள் ருக்மணி மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ருக்மணி இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தமிழழகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story