தீக்காயமடைந்த மூதாட்டி சாவு


தீக்காயமடைந்த மூதாட்டி சாவு
x

தீக்காயமடைந்த மூதாட்டி இறந்தார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை அருகே வம்பன் காலனியை சேர்ந்தவர் ரெத்தினம் (வயது 65). சம்பவத்தன்று இவர், வீட்டில் வெந்நீர் போட்ட போது ஸ்டவ் அடுப்பில் இருந்து தீ அவர் மீது பரவியது. இதில் உடலில் தீப்பிடித்து பலத்த காயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் ரெத்தினம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story