சரக்கு வாகனம் மோதி மூதாட்டி பலி

சரக்கு வாகனம் மோதி மூதாட்டி பலி
ஆனைமலை
ஆனைமலையை அடுத்த ஆவல்சின்னாம்பாளையம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்தவர் மாரியம்மாள்(வயது 63). இவர் சம்பவத்தன்று பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் திடீரென அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட மாரியம்மாள் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மாரியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த ஏழுமலை(36) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





