மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி


மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலி
x
தினத்தந்தி 21 Sep 2023 8:00 PM GMT (Updated: 21 Sep 2023 8:00 PM GMT)

திருவோணத்தில் மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பலியானார்.

தஞ்சாவூர்

திருவோணம் மெயின் ரோட்டை சேர்ந்த ராமுகண்ணு மனைவி மயில் கண்ணு (வயது75). இவர் சம்பவத்தன்று திருவோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே பட்டுக்கோட்டை- கந்தர்வகோட்டை சாலையில் நடந்து சென்றுக்கொண்டிருந்தார். அப்போது அதே சாலையில் மேலமேட்டுப்பட்டியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மயில்கண்ணு மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய மயில்கண்ணுவை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே மயில் கண்ணு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் திருவோணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story