மூதாட்டி தற்கொலை


மூதாட்டி தற்கொலை
x

சாணார்பட்டி அருகே விஷம் குடித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

திண்டுக்கல்

சாணார்பட்டி அருகே உள்ள மந்தநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சின்னம்மாள் (வயது 60). இவர், நீண்ட காலமாக உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனம் உடைந்த இவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த எலிமருந்தை (விஷம்) குடித்து தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சின்னம்மாள் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சாணார்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story