மது விற்ற மூதாட்டி கைது


மது விற்ற மூதாட்டி கைது
x

சிவகிரி அருகே மது விற்ற மூதாட்டியை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி

சிவகிரி:

சிவகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சஜிவ் தலைமையில் போலீசார் சிவகிரி, தர்மாபுரி, விஸ்வநாதப்பேரி ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிவகிரி அருகே விஸ்வநாதப்பேரி மேட்டுப்பட்டியைச் சேர்ந்த விஸ்வ சுப்ரமணியாபுரம் பகுதியில் உள்ள நவமணி மனைவி பரிபூரணம் (வயது 90) என்பவர் அனுமதி இன்றி மதுபாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தார். போலீசை கண்டதும் நழுவ முயன்ற அவரை போலீசார் பிடித்து சோதனை செய்தபோது மதுபாட்டில்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்து 16 மதுபாட்டில்களையும் கைப்பற்றினர்.


Next Story