பரமத்திவேலூர் அருகே கிணற்றில் மிதந்த முதியவர் உடல் போலீசார் விசாரணை


பரமத்திவேலூர் அருகே  கிணற்றில் மிதந்த முதியவர் உடல்  போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 5 Dec 2022 6:45 PM GMT (Updated: 5 Dec 2022 6:46 PM GMT)
நாமக்கல்

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் தாலுகா நெட்டையம்பாளையம் பொன்நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 65). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. காணாமல் போன செல்வத்தை அவருடைய மகன் ஈஸ்வரன் பல்வேறு இடங்களில் தேடினார். ஆனால் கிடைக்காததால் வேலூர் போலீசில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன செல்வத்தை தேடி வந்தனர். இந்த நிலையில் சேளூர் செல்லப்பம்பாளையத்தில் விஸ்வநாதன் என்பவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் முதியவரின் உடல் மிதப்பதாக வேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நாமக்கல் தீயணைப்பு துறையினர் உதவியுடன் போலீசார் கிணற்றில் மிதந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கிணற்றில் பிணமாக மிதந்தவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காணாமல் போன செல்வம் என்பது தெரியவந்தது. இதுகுறித்து வேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்


Next Story