முதியவர் விஷம் குடித்து தற்கொலை


முதியவர் விஷம் குடித்து தற்கொலை
x

நெல்லை அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு சேதுராமலிங்கபுரத்தை சேர்ந்தவர் ஜோசப் (வயது 59). இவர் தனது மனைவியுடன் நெல்லை பெருமாள்புரம் அருகே ரெட்டியார்பட்டி கார்த்திகேயன் நகரில் ஒரு தோட்டத்தில் குடியிருந்து வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சம்பவத்தன்று கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த ஜோசப் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story