முதியவர் விஷம் குடித்து தற்கொலை


முதியவர் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 5 Jun 2023 6:45 PM GMT (Updated: 5 Jun 2023 6:46 PM GMT)

நாலாட்டின்புத்தூர் அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி

நாலாட்டின்புத்தூர்:

நாலாட்டின்புத்தூர் அருகே உள்ள ராமலிங்கபுரம் கீழத் தெருவை சேர்ந்தவர் திருமால் (வயது 75). இவர் 45 வருடங்கள் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். முதல் மனைவி இறந்ததால் இரண்டாவதாக பூங்கோதை என்பவரை திருமணம் செய்தார். முதல் மனைவிக்கு பிறந்த 3 மகன்களும், 1 மகளும், இரண்டாவது மனைவிக்கு 2 மகள்களும் உள்ளனர். அனைவரும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் 2-வது மனைவியும் அவரைவிட்டு பிரிந்து சென்றுவிட்டாராம். இதனால் தனிமையில் வசித்து வந்த திருமால் வாழ்க்கையில் விரக்தியடைந்து நேற்று முன்தினம் மாலையில் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். இதை பார்த்த உறவினர்கள் அவரை உடனடியாக அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதலுதவி சிகிச்சைக்கு பின் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து நாலாட்டின்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகாதேவி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story