முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை

நெல்லை அருகே முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை அருகே தருவையை அடுத்த ஆலங்குளம் இந்திராநகரைச் சேர்ந்தவர் சின்னத்துரை (வயது 65). தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் வீட்டில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் முன்னீர்பள்ளம் போலீசார் விரைந்து சென்று, இறந்த சின்னத்துரையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





