தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை


தூக்குப்போட்டு முதியவர் தற்கொலை
x

குடும்பத்தகராறில் முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கரூர்

கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே உள்ள தும்பிவாடி சேங்கலாபுரத்தை சேர்ந்தவர் மணி (வயது 70). இவர் தனது மனைவி சரஸ்வதியுடன் வசித்து வந்தார். முதியவருக்கு மதுப்பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஏற்பட்ட சண்டையால் சரஸ்வதி வெங்கமேட்டில் உள்ள ஒரு ஆசிரமத்தில் சேர்ந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் முதியவர் மணி வீட்டில் கடும் துர்நாற்றம் வீசியதால் அருகே உள்ளவர்கள் ஜன்னல் வழியாக பார்த்துள்ளனர். அப்போது மணி தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த சின்னதாராபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சின்னதாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story