முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை


முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை
x

சேரன்மாதேவி அருகே முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி அருகே கங்கணாங்குளத்தை அடுத்த கரிசல்பட்டி காமராஜர் நகர் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் பாக்கியநாதன் (வயது 61). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி கிருஷ்ணவேணி. இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது. நேற்று மதியம் பாக்கியநாதன் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் சேரன்மாதேவி போலீசார் விரைந்து சென்று, பாக்கியநாதனின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story