பாம்பு கடித்ததில் முதியவர் பரிதாப சாவு


பாம்பு கடித்ததில் முதியவர் பரிதாப சாவு
x

பாம்பு கடித்ததில் முதியவர் பரிதாபமாக இறந்தார்.

வேலூர்

கீழ்பென்னாத்தூர்

பாம்பு கடித்ததில் முதியவர் பரிதாபமாக இறந்தார்.

கீழ்பென்னாத்தூரையடுத்த கணியாம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 68). விவசாய கூலி வேலை செய்து வந்தார்.

இவருக்கு 3 மகள்களும் 2 மகன்களும் உள்ளனர். 2 மகன்களும் திருப்பூரில் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் முத்துகிருஷ்ணன் தினமும் வீட்டின் வெளியே மாடுகளை கட்டி வைப்பது வழக்கம்.

அதேபோன்று நேற்று முன்தினம் இரவு மாடுகளை கட்டி வைத்துவிட்டு வீட்டின் உள்ளே தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது இரவு 11 மணியளவில் மழை பெய்ததால் வீட்டின் வெளியில் கட்டியிருந்த மாடுகளை ஓட்டிச் சென்று அருகிலுள்ள நிலத்தின் கொட்டகையில் கட்டிவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்தார்.

அப்போது முத்துகிருஷ்ணன் தன்னை ஏதோ ஒரு விஷப்பாம்பு வலது கால் சுண்டுவிரலில் கடித்து விட்டதாக கூறி அலறினார். உடனே அவரது எதிர் வீட்டில் வசிக்கும் மன்னார், சத்தம் கேட்டு ஓடி வந்து அவரை தனது ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு கீழ்பென்னாத்தூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சில் திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அவர் அனுப்பப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.

இது குறித்து முத்துகிருஷ்ணன் மனைவி இந்திராணி கீழ்பென்னாத்தூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் முனீஸ்வரன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story