மின்கம்பத்தில் ஆட்டோ மோதி முதியவர் பலி


மின்கம்பத்தில் ஆட்டோ மோதி முதியவர் பலி
x
தினத்தந்தி 14 July 2023 6:45 PM GMT (Updated: 15 July 2023 11:51 AM GMT)

கடையம் அருகே மின்கம்பத்தில் ஆட்டோ மோதிய விபத்தில் முதியவர் பரிதாபமாக இறந்தார்.

தென்காசி

கடையம்:

ஆலங்குளம் அருகே உள்ள குருவன்கோட்டை நடுத்தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசகம் (வயது 70). இவர் தனது மனைவி பத்தி (62), உறவினர்கள் அருமைநாயகம் மனைவி பரிபூரணம் (62), ஆசிர்வாதம் மனைவி மகேஸ்வரி (47), தங்கராஜ் மனைவி அரசிளம்குமரி (43) ஆகியோருடன் கடையம் அருகே புலவனூரில் உள்ள துக்க வீட்டுக்கு சென்றார். பின்னர் அவர்கள் குருவன்கோட்டைக்கு ஆட்டோவில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். ஆட்டோவை வெங்கடேஷ் என்பவர் ஓட்டினார்.

கடையம் கேளையாபிள்ளையூர் அருகே சென்றபோது, ஆட்டோ எதிர்பாராதவிதமாக மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த சீனிவாசகத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். மற்ற அனைவரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இதுகுறித்து கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story