கார் மோதி முதியவர் சாவு


கார் மோதி முதியவர் சாவு
x

கார் மோதி முதியவர் இறந்தார்.

புதுக்கோட்டை

அரிமளம் ஒன்றியம், ஏத்தநாடு கிராமத்தை சேர்ந்தவர் ராமையா (வயது 75). விவசாயி. இவர் கே.புதுப்பட்டியில் இருந்து ஏத்தநாடு கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கரைமேல் அய்யனார் கோவில் எதிரே சென்று கொண்டிருக்கும் போது, அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக ராமையா மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கே.புதுப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராமையா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து திருச்சி காட்டூர் பகுதியை சேர்ந்த கார் டிரைவர் கண்ணதாசன் என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story