மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு


மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு
x
தினத்தந்தி 4 July 2023 6:45 PM GMT (Updated: 4 July 2023 6:46 PM GMT)

கீழையூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு

நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி:

கீழையூர் ஒன்றியம் கருங்கண்ணி கிழக்கு கடற்கரை சாலை பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது 88).விவசாயி. இவர் நேற்று காலையில் அவரது வீட்டில் இருந்து குப்பையை கொட்டுவதற்காக கிழக்கு கடற் சாலையை கடக்க முயன்றார். அப்போது திருப்பூண்டியிலிருந்து மேலப்பிடாகை நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் ராஜமாணிக்கம் மீது மோதியது. இதில் அவருக்கு தலை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் அவைர மீட்டு நாகை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கீழையூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story