மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு


மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு
x
தினத்தந்தி 31 Oct 2022 6:45 PM GMT (Updated: 31 Oct 2022 6:45 PM GMT)

கள்ளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியானாா்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி அருகே உள்ள மோ.வன்னசூர் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 60). இவர் வீட்டின் அருகில் உள்ள சாலையில் நடந்து சென்றார். அப்போது ரோடுமாமனந்தல் பகுதியில் இருந்து வேகமாக வந்த மோட்டார் சைக்கிள், பெரியசாமி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பெரியசாமி பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story