ரெயிலில் அடிபட்டு முதியவர் பலி


கோவில்பட்டியில் ரெயிலில் அடிபட்டு முதியவர் பலியானார்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி வேலாயுதபுரம் ரெயில்வே மேம்பாலம் அருகில் உள்ள தண்டவாள பகுதியில் 70 வயது முதியவர் பிணம் கிடப்பதாக கிராம உதவியாளர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதன் பேரில் தூத்துக்குடி ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மகா கிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு ெசன்று விசாரணை நடத்தினா். விசாரணையில், ரெயிலில் அடிபட்டு இறந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. அவருடைய இடது கையில் சங்கரவேணி என்று பச்சை குத்தப்பட்டுள்ளது. சிவப்பு நிறத்தில் முழுக்கை சட்டையும், நீல நிறத்தில் கைலியும் கட்டியிருந்தார்.

போலீசார் முதியவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவர் தண்டவாளத்தைக் கடக்கும் போது ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story