கோவில்பட்டியில் ரெயிலில் அடிபட்டு முதியவர் பலி


கோவில்பட்டியில் ரெயிலில் அடிபட்டு முதியவர் பலி
x
தினத்தந்தி 5 Sep 2023 6:45 PM GMT (Updated: 5 Sep 2023 6:45 PM GMT)

கோவில்பட்டியில் ரெயிலில் அடிபட்டு முதியவர் பலியானார்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி ரெயில் நிலையத்திற்கும், இளையரசனேந்தல் சுரங்க வழிபாதைக்கும் இடையே உள்ள தண்டவாளம் அருகே முதியவர் பிணம் கிடந்தது. இதுகுறித்து அந்த வழியாக சென்ற ஒரு ரெயிலின் லோகோ பைலட் கொடுத்த தகவலின் பேரில் தூத்துக்குடி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில், விசாரணையில் அவர், இதே பகுதியில் உள்ள நடராஜபுரம் 9-வது தெருவை சேர்ந்த மாரியப்பன் (வயது 93) என்பதும், அவர் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, ரெயிலில் அடிபட்டு அவர் இறந்ததும் தெரியவந்தது. அவரது உடலை போலீசார் கைப்பற்றி கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story