வாகனம் மோதி முதியவர் சாவு


வாகனம் மோதி முதியவர் சாவு
x

வாகனம் மோதி முதியவர் சாவு

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டையை அடுத்த துவரங்குறிச்சியில் அதிராம்பட்டினம் மெயின் ரோட்டில் அடையாளம் தெரியாத வாகன மோதி 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முதியவரின் உடலை கைப்பற்றி பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இறந்த முதியவர் வெள்ளை நிற வேட்டி அணிந்து இருந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தில் உயிரிழந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என பல்வேறு ேகாணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story