குண்டாறு அணையில் தவறி விழுந்து முதியவர் சாவு

குண்டாறு அணையில் தவறி விழுந்து முதியவர் பரிதாபமாக இறந்தார்.
செங்கோட்டை:
செங்கோட்டை அருகே உள்ள குண்டாறு அணையில் நேற்று காலையில் முதியவர் பிணம் கிடந்தது. இதுகுறித்து செங்கோட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் செங்கோட்டை மேலூர் பெரியசாமி தெருவைச் சேர்ந்த பூதத்தான் (வயது 85) என்பதும், அந்த வழியாக சென்றபோது, அணையில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்று தெரியவந்தது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





