சைக்கிள் மீது வேன் மோதி முதியவர் சாவு


சைக்கிள் மீது வேன் மோதி முதியவர் சாவு
x

சைக்கிள் மீது வேன் மோதி முதியவர் பரிதாபமாக இறந்தார்.

கரூர்

குளித்தலை அருகே உள்ள சின்னையம்பாளையம் புதுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் நடராஜன் (வயது 61). இவர் நேற்று குளித்தலை-மணப்பாறை சாலையில் குளித்தலை அருகே உள்ள குப்பாச்சிப்பட்டி பகுதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே சாலையில் பின்னால் வந்த பயணிகள் வேன் நடராஜன் ஓட்டி சென்ற சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த நடராஜனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர் மருத்துவமனைக் செல்லும் வழியில் இறந்தார். இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story