சாலை விபத்தில் முதியவர் பலி


சாலை விபத்தில் முதியவர் பலி
x

சாலை விபத்தில் முதியவர் பலியானார்.

கரூர்

லாலாபேட்டை அருகே உள்ள ஆண்டியப்பன் நகரை சேர்ந்தவர் அப்துல் முஸ்தபா (வயது 72). இவர் தனது ஸ்கூட்டரில் கரூர்-திருச்சி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி அப்துல்முஸ்தபா கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அப்துல்முஸ்தபா உடல் பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story